Sunday, May 22, 2011

கனவுக் கவிதை (யாமாம் !)...

 கனவுக் கவிதை (யாமாம் !)



நன்றி - புகைப்பட உதவி - http://bharatendu.wordpress.com/tag/chanakya/

காக்கைகளின் எண்ணிக்கை அதிகமாகிவிட்டிருந்தது...
கோடிக் கணக்கான காக்கைகள் பறந்து கொண்டிருந்தன...

ஆங்காங்கே சில மனிதர்கள்...
அவர்களும், காக்கைகளால்  சுற்றி வளைத்து 
தாக்கப் பட்டுக் கொண்டிருந்தார்கள் ...

ஒரு தாய் பென்குயின் , 
தனது குழந்தைக்கு வேடிக்கைக் காட்ட என்னைப் பணித்தது...

பறவைகளின் தோட்டங்களில் மலர் பறிக்க, 
மனிதர்கள் பணியமர்த்தப் பட்டிருந்தார்கள்...

ஆங்காங்கே கிடந்த ராட்சத  பறவைகள், அவைதம் சிறகுகளென
பயமூட்டிய படி பறந்து கொண்டிருந்தன...

தங்கள் வீட்டு காம்பவுண்டில், 
சில காக்கைகள் எங்களுக்கு உணவளித்தன...

குழம்பு சோறு முடித்துவிட்டு, 
மறு சோறு வாங்க பயத்துடன் எத்தனித்த  போது,
"வேணுங்கறத  எடுத்துக்கோ" என்றதோர்  கிழட்டுக் காக்கை...





டிஸ்கி :
என் கனவில் வந்த காட்சிகள் இவை.

Thursday, May 5, 2011

அக்ஷய திருதியை சிறப்புக் கவிதை (யாமாம் !)




                      நன்றி : புகைப்பட உதவி - http://elayarajaartgallery.com/oilpainting.html


அக்ஷய திருதியை அன்றைக்கு நகை வாங்கினால்,
வீட்டிற்கு லக்ஷ்மி வருவாள் என்று,
எல்லா வீட்டு லக்ஷ்மிகளும்,
நகைக் கடை வரிசையில்!


===========================================================================


                    நன்றி : புகைப்பட உதவி - http://flickrhivemind.net


அதிகாலையில் இருந்தே,
ஒரு எறும்பும், நானும்,
உன் வீட்டு வாசலில் காத்துக் கொண்டிருக்கிறோம்.
கோலம் போட,  நீ அரிசி மாவை எடுத்துக் கொண்டு வருவாய் என்றும்,
கோலம் போட, அரிசி மாவை எடுத்துக் கொண்டு நீ வருவாய் என்றும் !



Tuesday, May 3, 2011

உலகின் மிகச் சிறிய திகில் கதை... (18+)

டிஸ்கி 1 : இளகிய மனம் கொண்டவர்கள், இதய நோயாளிகள் யாரும் இந்தக் கதையை, தனியாக படிக்க வேண்டாமென்று எச்சரிக்கப் படுகிறார்கள்.
=========================================================================
   
                                      நன்றி : புகைப்பட உதவி - htp://delhi.olx.in

நானும் என் நண்பன் குமாரும், ஒரு பிணத்தை  அதன் வீட்டில் ஒப்படைக்க, அதைத் தூக்கிக் கொண்டு சைக்கிளில் சென்று கொண்டிருந்தோம்.



























கதை அவ்வளவுதான் ! 


"இதில் எங்கே திகில் இருக்கிறது ?!" என்ற கேட்கிறீர்கள் ?! 










நானும் , குமாரும் வைத்திருந்த  பிணம், என் நண்பன் குமாருடையது !

=========================================================================
டிஸ்கி 2 : இது நெஜமாவே , என் கனவில் வந்தது !



மின்வெட்டு - தமிழர்களை விஞ்ஞானிகளாக்கும் தொலைநோக்கு முயற்சியா ?! (நகைச்சுவை)

கிட்டத்தட்ட ஒருவருடத்திற்கு மேலாக நான் அடிக்கடி பதிவெழுதுவது இல்லை. இருப்பினும் யாரவது நம் தளத்திற்கு வருகிறார்களா என்று STATS பார்ப்...