Saturday, November 19, 2011

கிண்டி கத்திப்பாரா மேம்பாலம் விரைவில் இடமாற்றம் ?!

முன் குறிப்பு : முழுவதும் கற்பனையே, யாரையும் புண்படுத்த அல்ல!


நேற்று அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பின் சாராம்சம் :
கிண்டி கத்திப்பாராவில் செயல் பட்டு வரும், பெரிய மேம்பாலம் விரைவில் இட மாற்றம் செய்யப் பட உள்ளது. புதிய கத்திப்பாரா மேம்பாலம் , சென்னைக்கு மிக அருகில் உள்ள திண்டிவனத்திற்கு மாற்றம் செய்யப் படுகிறது.( சென்னையில் இருந்து, திண்டிவனத்திற்கு அடிக்கடி பருந்து வசதி உள்ளது !). தற்போது உள்ள மேம்பாலம், குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் விளையாடுவதற்கான 'சறுக்கல்' ஆக, மாற்றம் செய்யப் படும். இதன் மூலம், இந்தியாவிலேயே, ஏன், உலகிலேயே குழந்தைகள் மற்றும் பெரியவர்களின் பொழுதுபோக்கில், தமிழகம் முன்னோடியாகத் திகழும்.


                         நன்றி - புகைப்பட உதவி : www.picasaweb.google.com

டிஸ்கி : சில நாட்களுக்கு முன்பு தமிழக அரசு அண்ணா நூற்றாண்டு நூலகம் இடமாற்றம் செய்யப்படும் என்கிற அறிவிப்பின் 'பாதிப்பு' தான் இந்த பதிவு.

==========================================================================

இருக்கிற மருத்துவமனைகளின் நிலைமையை சீராக்கினாலே, தமிழகம் குழந்தைகள்  நலனில் மட்டுமல்ல, அனைவரின் நலனிலும் முன்னோடியாகத் திகழும் என்பதே என் எண்ணம்.அதை விடுத்து, 'இத அங்கவை , அத இங்கவை ' என்று 'மாற்று அரசியல்'  செய்வதை மக்கள் ஒருபோதும் விரும்ப மாட்டார்கள்.
எதற்கும் இடமாற்றம் செய்வதற்கு முன் ஒருமுறை பார்த்து விடலாம் என்று கடந்த வாரம் நானும், நண்பனும் போயிருந்தோம்.



                       நன்றி - புகைப்பட உதவி - www.annacentenarylibrary.blogspot.com 

ஒரு அரசு நூலகத்திற்கான எந்த ஒரு 'அறிகுறியும்' இன்றி, அட்டகாசமாக இருந்தது. ஒவ்வொரு தளமாக சுற்றிப்பார்க்கவே நான்கு மணி நேரம் ஆகிற்று.
மேலும் அங்கிருந்த வருகையர் பதிவேட்டில், எல்லாரும் நூலக மாற்றம் தேவையற்றது என்றுதான் எழுதியிருந்தார்கள். அத்துணை பெரும் திமுக வைச் சேர்ந்தவர்களாக இருக்க வாய்ப்புகள் குறைவுதானே ?! ஒருவர் எழுதியிருந்தது, "நாங்கள் விரும்பியது ஆட்சி மாற்றம் தான் - நூலக மாற்றம் இல்லை " !


சட்டப் பேரவையை இடமாற்றம் செவதில் ஒரு லாஜிக் இருக்கிறது. (அது சரியா தவறா என்பது வேறு விஷயம் !) . நீங்கள் அங்கு போவீர்கள், வருவீர்கள். நூலகத்திற்கு நீங்கள் வருவது சாத்தியமா என்ன ?! இருந்துவிட்டுத்தான் போகட்டுமே ?!



Wednesday, August 31, 2011

அமெரிக்காவின் கடன் பிரச்சனைக்கு தீர்வு இதோ ! (நகைச்சுவைக்காக மட்டும் !)

 டிஸ்கி : இந்த பதிவு, முழுவதும் நகைச்சுவைக்காகவே . சிரிப்பு வந்தால் சிரித்துவிட்டு போகவும். இல்லையேல் அப்படியே அடுத்த தளத்திற்கு போகவும்.

அங்க அடிச்சா இங்க வலிக்கும் என்பார்களே.. அது போல அமெரிக்காவில் பொருளாதார பிரச்சினை வந்தால், உலகம் முழுவதும் திகிலடிக்கிறது. லோன் போட யோசிக்க வேண்டியிருக்கிறது. டீலக்ஸ் BUS ஐ, விட்டு விட்டு LSS BUS க்காக காத்திருக்கிறார்கள்.  அரசு வேலைகளுக்கு விண்ணப்பிக்கும் IT ஆசாமிகள் எண்ணிக்கை அதிகரிக்கிறது. என்ன வாழ்க்கைடா இது என்கிறார்கள்.



எதுக்கு இவ்வளவு கஷ்டம் ?!

இத்தனைக்கும்  நாம் பதிவெழுதும் இந்த தளம் ஒரு அமெரிக்க கம்பெனி தானே நமக்கு கொடுத்தது ?! ஒரு நன்றிக் கடனாக , அமெரிக்க கடன் பிரச்சினைக்கு தீர்வு  சொல்வது நம் கடமை இல்லையா ?

 இதோ, அமெரிக்காவிற்கு மட்டுமல்ல எங்கு கடன் பிரச்சினை இருந்தாலும் , அதற்கு ஓர் அருமருந்து ! 



நன்றி புகைப்பட உதவி :
http://www.financialfacts.org/wading-through-the-recession-tips-and-advice/
http://allkavach.com/products-shri-dhan-laxmi-yantra-23.aspx

ஸ்ரீ தனலட்சுமி எந்திரம் !


 அமெரிக்க பதிவர்கள் யாராவது வாங்கி, வெள்ளை மாளிகையில் கொடுங்களேன் !

உடனே சமஸ்தானத்திற்கு போன் செய்யவும் !



Sunday, May 22, 2011

கனவுக் கவிதை (யாமாம் !)...

 கனவுக் கவிதை (யாமாம் !)



நன்றி - புகைப்பட உதவி - http://bharatendu.wordpress.com/tag/chanakya/

காக்கைகளின் எண்ணிக்கை அதிகமாகிவிட்டிருந்தது...
கோடிக் கணக்கான காக்கைகள் பறந்து கொண்டிருந்தன...

ஆங்காங்கே சில மனிதர்கள்...
அவர்களும், காக்கைகளால்  சுற்றி வளைத்து 
தாக்கப் பட்டுக் கொண்டிருந்தார்கள் ...

ஒரு தாய் பென்குயின் , 
தனது குழந்தைக்கு வேடிக்கைக் காட்ட என்னைப் பணித்தது...

பறவைகளின் தோட்டங்களில் மலர் பறிக்க, 
மனிதர்கள் பணியமர்த்தப் பட்டிருந்தார்கள்...

ஆங்காங்கே கிடந்த ராட்சத  பறவைகள், அவைதம் சிறகுகளென
பயமூட்டிய படி பறந்து கொண்டிருந்தன...

தங்கள் வீட்டு காம்பவுண்டில், 
சில காக்கைகள் எங்களுக்கு உணவளித்தன...

குழம்பு சோறு முடித்துவிட்டு, 
மறு சோறு வாங்க பயத்துடன் எத்தனித்த  போது,
"வேணுங்கறத  எடுத்துக்கோ" என்றதோர்  கிழட்டுக் காக்கை...





டிஸ்கி :
என் கனவில் வந்த காட்சிகள் இவை.

Thursday, May 5, 2011

அக்ஷய திருதியை சிறப்புக் கவிதை (யாமாம் !)




                      நன்றி : புகைப்பட உதவி - http://elayarajaartgallery.com/oilpainting.html


அக்ஷய திருதியை அன்றைக்கு நகை வாங்கினால்,
வீட்டிற்கு லக்ஷ்மி வருவாள் என்று,
எல்லா வீட்டு லக்ஷ்மிகளும்,
நகைக் கடை வரிசையில்!


===========================================================================


                    நன்றி : புகைப்பட உதவி - http://flickrhivemind.net


அதிகாலையில் இருந்தே,
ஒரு எறும்பும், நானும்,
உன் வீட்டு வாசலில் காத்துக் கொண்டிருக்கிறோம்.
கோலம் போட,  நீ அரிசி மாவை எடுத்துக் கொண்டு வருவாய் என்றும்,
கோலம் போட, அரிசி மாவை எடுத்துக் கொண்டு நீ வருவாய் என்றும் !



Tuesday, May 3, 2011

உலகின் மிகச் சிறிய திகில் கதை... (18+)

டிஸ்கி 1 : இளகிய மனம் கொண்டவர்கள், இதய நோயாளிகள் யாரும் இந்தக் கதையை, தனியாக படிக்க வேண்டாமென்று எச்சரிக்கப் படுகிறார்கள்.
=========================================================================
   
                                      நன்றி : புகைப்பட உதவி - htp://delhi.olx.in

நானும் என் நண்பன் குமாரும், ஒரு பிணத்தை  அதன் வீட்டில் ஒப்படைக்க, அதைத் தூக்கிக் கொண்டு சைக்கிளில் சென்று கொண்டிருந்தோம்.



























கதை அவ்வளவுதான் ! 


"இதில் எங்கே திகில் இருக்கிறது ?!" என்ற கேட்கிறீர்கள் ?! 










நானும் , குமாரும் வைத்திருந்த  பிணம், என் நண்பன் குமாருடையது !

=========================================================================
டிஸ்கி 2 : இது நெஜமாவே , என் கனவில் வந்தது !



Saturday, March 26, 2011

2016 - தேர்தல் அறிக்கை இதோ... (பதிவர்களுக்கு பரிசு மழை !)

நமக்கு எவ்வளவோ உதவிகள் செய்திருக்கும் நம்ம அரசியல் கட்சிகளுக்கு, நாம ஏதாவது செஞ்சிருக்கோமா ?! ன்னு யோசிச்சு பார்த்தப்ப தான், சரி இந்த தேர்தலை விட்டுடுவோம். வரப்போற 2016 சட்டமன்ற தேர்தலுக்கு , நானே ஒரு அறிக்கை தயார் பண்ணி குடுக்கலாம்னு ! நம்மாலான சிறு உதவி !

( முழுவதும் நகைச்சுவைக்காகவே ! யார் மனதையும் புண்படுத்த அல்ல ! )


# ஆறாம் வகுப்பு முதல், கல்லூரி வரையிலான மாணவர்களுக்கு, ஒரு பாடத்திற்கு  60 இலவச மதிப்பெண்கள் வழங்கப்படும்.

# ஒரு ஓட்டுனர், ஒரே வழித்தடத்தில் 10 வருடங்களுக்கு மேல் ஒரு பேருந்தை ஓட்டியிருந்தால், அந்த பேருந்தை அவரே வைத்துக் கொள்ளலாம். ( உபயம் - உடன் பணி புரியும் நண்பர் )

# ஒரு குடும்பம் 5 வருடங்களுக்கு மேல் ஒரே வீட்டில் வாடகைக்கு இருந்தால், அந்த வீடு அவர்களுக்கே வழங்கப் படும் (நாமளும் எவ்ளோ நாள்தான் வாடகை வீட்லயே இருக்கிறது ?!). வீட்டு ஓனர் விருப்பப்பட்டால்  , 15 லட்ச ரூபாய்  (வாடகை தாரருக்கு ! ) செலுத்தி அந்த வீட்டைத் திரும்பப் பெறலாம்.

# ஒரு பதிவர் நூறு பதிவுகளுக்கு மேல் எழுதி, ஒன்றுமே பரவலாக பேசப் படவில்லை என்றால், ரூபாய் . 50 மட்டும் செலுத்தினால்  போதும் - தெருவுக்குத் தெரு அவரின் பதிவுகள் போஸ்டர் அடித்து ஒட்டப் படும். போஸ்டர் செலவை அரசே ஏற்கும். 100 ரூபாய் செலுத்தினால், தொலைக் காட்சிகளிலும் , திரை அரங்கங்களிலும் காண்பிக்கப் படும்.

# தெருவிற்கு ஒரு 'அரசு ATM மெசின்' நிறுவப் படும். பொது மக்கள் தங்கள் ரேசன் கார்டுகளை SWIPE செய்து, மாதம் ருபாய் 10000 பெற்றுக் கொள்ளலாம்.

 நன்றி - புகைப்பட உதவி : http://www.travel247.tv/india/tourist-guide/indian-money

# பொது மக்களின் பொழுது போக்கிற்காக, அனைத்து மாவட்டத் தலை நகரங்களிலும் ஒரு கடற்கரை ஏற்படுத்தப் படும்.அவை , திங்கள் - முதல் வெள்ளி வரை காலை 4 மணிமுதல் இரவு 2 மணி வரை யும், ஞாயிற்றுக்க் கிழமைகளில், 24 மணிநேரமும் திறந்திருக்கும்.

# ஒருவர், ரயில் பயணத்தை  முடித்து விட்டு , அவருடைய பயணசீட்டை காட்டினால், பயணக் கட்டணத்தின் இரண்டு மடங்கு பணம் இலவசமாக வழங்கப் படும்.

# டெல்லியில் இருந்து நமக்கு வரவேடிய அதிகாரங்களை , நடுவில் இருக்கிற மாநிலங்கள் பிரித்துக் கொள்வதால், தமிழகத்தை டெல்லிக்குப் பக்கத்தில் மாற்றுவதற்கோ , அல்லது டெல்லியை தமிழகத்திற்கு பக்கத்தில் மாற்றுவதற்கோ முயற்சி மேற்கொள்ளப் படும் ( உபயம் - வடிவேலு காமெடி ).

# எல்லாவற்றிற்கும் மேலாக, வாக்காள நண்பர்களே , நீங்கள் ஒவ்வொருவரும், தலா இரண்டு ஓட்டுக்கள் அளிக்க ஏற்பாடு செய்யப் படும்.


                        நன்றி - புகைப்பட உதவி :http://www.secwhistleblowerprogram.org

# இவை அனைத்திற்கும் முத்தாய்ப்பாக, (உதாரணத்திற்கு) உங்கள்  வீட்டில் இரண்டு குழந்தைகள் 10 , மற்றும் 8 வயதுகளில் இருப்பார்களே யானால், அவர்கள் இருவரையும் ஒருங்கிணைத்து ஒரு ஓட்டாக கணக்கில் கொள்ளப் படும்.


(இந்த தேர்தல் அறிக்கைக்கு  காப்புரிமை பெறலாமென்று இருக்கிறேன் ! 2016  இல்  நல்ல விலை போக வாய்ப்பிருக்கிறது !)



Saturday, March 19, 2011

எலெக்சன்னா உங்களுக்கு என்ன அவ்வளவு காமெடியா போச்சா ?!

நம்ம தேர்தல் அறிக்கைதான் நாம தோக்கறதுக்கு காரணமா இருக்கப் போகுது !
ஏன் அப்புடி சொல்ற ?!
பின்ன என்ன, தலைவர் - 'நாங்க ஆட்சிக்கு வந்தா, வீட்டுக்கு ஒரு சின்ன வீடு தருவோம்' னு தேர்தல் அறிக்கை வெளியிடறார் !

#####################################################################################

'அன்பான வாக்காளர் பெருமக்களே , மாற்றுக் கட்சி வேட்பாளர் மொத்தம் ஆறு கொலைகள் செய்திருக்கிறார் ! ஆனால், எங்கள் கட்சியின் வேட்பாளர் வெறும் இரண்டு கொலைகள் மட்டுமே செய்திருக்கிறார்! ஆகவே நீங்களே சிந்தித்துப் பாருங்கள் , இருவரில் யார் நல்லவர் என்று !'


நன்றி - புகைப்பட உதவி : http://www.intell.rtaf.mi.th/newsdetail.asp?id=51010


#####################################################################################
 
தலைவர்க்கு இருந்தாலும் இவ்வளவு அவசரம் கூடாது!
ஏன் என்ன ஆச்சு ?!
தமிழ்நாட்டு சட்டசபைக்கு மொத்தம் 330 தொகுதிகளுக்கு வேட்பாளர் பட்டியலை  அறிவிச்சுட்டார் !

Saturday, February 26, 2011

சச்சின் டெண்டுல்கருக்கு (மீண்டும்) ஒரு பகிரங்கக் கடிதம்...

(மீள்பதிவு)
 அன்பிற்குரிய சச்சின் அவர்களுக்கு,



        இந்தியாவிலுள்ள கோடிக்கணக்கான  உங்கள்  ரசிகர்களில் ஒருவர் எழுதிக் கொள்வது. இப்போது  நடைபெற்றுவரும் DLF IPL 3 யில், நீங்கள் மிக சிறப்பாக செயல்பட்டு வருகிறீர்கள்.வழக்கம் போல வாழ்த்துக்கள் ! ஆனால், முன்பு  உங்களிடம் இருந்த அந்த பொறுமை, இப்போது கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து வருகின்றது போல் எனக்குத் தோன்றுகிறது. உங்களுக்கு அழகே, அந்த பொறுமைதானே ஐயா ? இந்த போட்டிகளை விட எத்தனையோ கடினமான, த்ரில்லிங்கான போட்டிகளை நீங்கள் பார்த்திருக்கிறீர்கள் தானே ? இது என்ன சாதாரண IPL தானே ? இந்த பதிவை எழுத  ஆரம்பிக்கும் போது நீங்கள் IPL 2010 FINAL  விளையாடிக் கொண்டிருக்கிறீர்கள். முடிவு என்னவாக வேண்டுமானாலும் இருந்து விட்டுப் போகட்டும். ஒருவேளை, உங்கள் தலைமையிலான மும்பை அணி, தோற்றே  போனாலும் கூட, உங்களை நாங்கள் பழைய சச்சின் டெண்டுல்கராகவே பார்க்க விரும்புகிறோம்.



அப்படி மும்பை இந்தியன்ஸ் அணி தோற்றுப் போனாலும், நீங்கள் என்றைக்குமே தோற்க மாட்டீர்கள் சச்சின் ! யாரவது உங்களுடன் போட்டி போட்டால்தானே தோற்பதற்கு ?!
நான் என் நண்பர்களிடம் அடிக்கடி  சொல்லி பெருமைப் பட்டுக் கொள்வதுண்டு - இன்றைய கிரிக்கெட்டில் சச்சினைப் போல ஒரு ஜென்டில் மேன் வேறு யாருமில்லை என்று! ஆனால், நீங்கள் இவ்வளவு கோபப்  பட்டு விளையாடி நாங்கள் பார்த்ததே இல்லையே ? உண்மையில் இது போன்ற போட்டிகளில் வென்றாக வேண்டிய கட்டாயம் உங்களுக்கு உண்டென்பது எங்களுக்கும் தெரியும். இது ஒரு வகையில் உங்களைப் போன்ற மூத்த வீரர்களுக்கு மானப் பிரச்சனையாகவும் பார்க்கப் படுகிறது. என்னதான் இருந்தாலும் எங்களுக்கு இந்த சச்சின் வேண்டாம். பழைய சச்சினைக் கொடுங்கள் ! சர்வதேச போட்டிகளில் இருந்து நீங்கள் ஓய்வு பெறக் கூடாதென்பதை நாங்கள் எவ்வளவு விரும்புகிறோமோ , அதே அளவுக்கு நீங்கள் IPL இல் இருந்து கூடிய சீக்கிரம் ஓய்வு பெற்று விடுங்கள் என்று வேண்டிக்கொள்கிறோம் -  உங்களை முழு இந்தியாவிற்குமானவராக ஏற்றுக் கொண்டு விட்ட பிறகு !



ஒவ்வொரு இந்திய கிரிக்கெட் ரசிகனின் கனவு, வருகின்ற 2011  இல் உலகக் கோப்பையை இந்தியா வெல்ல வேண்டும் என்பது. ( 2011 ல நாங்க எத்தனைதான் எதிர்பார்க்கிறது ? தமிழ்நாட்டின் அடுத்த முதல்வர் யார் என்பதற்கும் இதே ஆண்டுதான் , பதிலை வைத்துக் கொண்டிருக்கிறது ! ) அதிலும் உங்கள் பங்களிப்பு அதிகம் இருக்க வேண்டுமென்பது ! இந்த IPL கருமத்தைஎல்லாம் விட்டு விட்டு வெளியே வாருங்கள். உங்களின் ஒவ்வொரு சிங்கிள் ரன்னிற்கும் விசிலடிக்க கோடி இந்திய  மக்கள் காத்திருக்கிறார்கள் !



 2011 நம்ம கையிலே,  சந்திப்போண்டா  தோழா நாம WORLD CUP ல !

Saturday, February 19, 2011

நடுநிசி நாய்கள் - சிறப்பு சிறுகதை

ஒவ்வொரு இரவும் பணிமுடித்து காலத் தாமதமாக வீடு திரும்புவது என்பது எங்கள் வேலைக்கே உள்ள 'சிறப்பம்சம்'. ஆம், நான் ஒரு தனியார் மென்பொருள் நிறுவனத்தில் வேலை பார்க்கிறேன்.

சிலநாட்கள், 10 மணி,சிலநாட்கள் 12 மணி.அல்லது அடுத்தநாள் காலை 3 அல்லது 4 மணி. பெண்கள் என்றால், CAB ஏற்பாடு செய்து விடுவார்கள்.எனக்கு , சொந்தமாக ஒரு BIKE உண்டு. ஊரில் அப்பா வாங்கி வைத்திருந்தது. அதை நான் எடுத்துக் கொண்டு , அவருக்கு ஒரு புது TVS 50 வாங்கிக் கொடுத்து விட்டேன். வயசாகி விட்டதால், GEAR வண்டி ஓட்ட வேண்டாம் என்று சொல்லி வைத்திருக்கிறேன்.


இரவு தாமதமாக வந்தாலும், TRAFFIC போலீஸ் எங்களை எதுவும் கேட்க மாட்டார்கள். அதிகாலை 3 மணி ஆனாலும், சட்டையை IN பண்ணிக் கொண்டும், ID CARD ஐ, வெளியில் தெரியும் படி  மாட்டிக் கொண்டு வருவோம். அவர்களும் கணித்து விடுவார்கள். சிலசமயம் 100 - 200 கொடுப்பதுண்டு.

மெயின் ரோட்டில் வரும்போதெல்லாம் ஒரு பிரச்சினையும் இல்லை. உள்ளே தெருவில் நுழைந்து விட்டால், 'அவர்களின்' ஆட்டம் ஆரம்பமாகிவிடும். கூட்டமாக நின்று கொண்டு வருவோர் போவோரை மிரட்டிக்  கொண்டு  இருப்பார்கள். பெண்கள் CAB இல் சென்று விடுவதால் பிரச்சினை இல்லை.கூடவே SECURITY GAURD வேறு இருப்பார்கள்.என்னைப் போன்ற மென்பொருள் 'இளைஞர்களுக்கு' தான் கஷ்டம்.


கொஞ்சம் தைரிய சாலியாக இருந்தால் , நின்று  முறைத்துப் பார்க்கலாம். அவர்கள் திரும்பிப் போய் விடுவார்கள்.அல்லது நாம் கூட்டமாக இருக்க வேண்டும்.அப்போது அவர்கள் கொஞ்சம் பயப்படுவார்கள். ஒருத்தன் சவுண்டு கொடுத்தால் போதும், சுத்தி இருக்கிற எல்லாரும் சேர்ந்து கொள்வார்கள். இவர்களைத் தட்டிக் கேட்க ஆட்களே இல்லையா ?



இவர்களால் எத்தனை பேர் ACCIDENT ஆகியிருக்கிறார்கள் ?! எத்தனை மரணங்கள் ?! எத்தனை காயங்கள் ?! ஏன் இப்படி ?! இனியும் பொறுத்திருக்கக் கூடாது.திருப்பி அடிக்க வேண்டும்.

ஆஹா, இன்றும் லேட் ஆகிவிட்டதே ?!
பயம் என்னை ஆட்கொள்ள ஆரம்பித்தது. எவ்வளவு வேகமாக வண்டியை ஓட்டினாலும், துரத்திக் கொண்டே வருவார்களே ?! "இன்றோடு நான் பயந்து ஓடுவது கடைசியாக இருக்க வேண்டும்" , என்று மனதுக்குள் நினைத்துக் கொண்டேன். HELMET போட்டுக் கொண்டு வண்டி ஓட்டினால், அவர்களின் கோபம் இன்னும் அதிகமாகி விடும்.

நாளை காலை முதல் வேலையாக இதைப் பற்றி புகார் சொல்லியாக வேண்டும். அல்லது அனைத்துப் பத்திரிக்கைகளுக்கும் செய்தியாவது அனுப்ப வேண்டும். நல்ல வேலை இன்று வெள்ளிக் கிழமை. நாளை ஆபீஸ் கிடையாது. இதுதான்  தக்க சமயம்.ACT NOW !

"என் சமூகத்திற்கு நான்" செய்யும் சிறு அல்லது பேரு உதவி இதுவாக இருக்கக் கூடும்!

சனிக்கிழமை காலை 11 மணி.
என் மொபைல் போனில் இருந்து சுழற்றினேன் - அல்லது கால் செய்தேன்.
1913 

"ஹலோ , சென்னை கார்பொரேசன் ?! நான் இங்க அடையார்ல இருந்து பேசறேன். தெரு நாய்கள் பத்தி கம்ப்ளைன்ட் பண்ணனும் ! ஒரே டார்ச்சரா இருக்கு சார் ! கொஞ்சம் CONNECT பண்றீங்களா ?!"



(நன்றி - கதைத்  தலைப்பு உதவி - கவுதம் வாசுதேவ மேனன் , புகைப்பட உதவி - www.tamilvix.com, http://www.flickr.com/photos/kxp130/229446264/)


Saturday, February 12, 2011

கொஞ்சமாச்சு சி ரிப்பு வருதான்னு சொல்லுங்களேன் ?!


தலைவர் டிவி பார்த்து ரொம்ப கேட்டுப் போயிட்டாரா ?! ஏன் ?!
ஆமா, 'ஊழல் பண்ணுறதால நல்லது நடந்தா, ஊழல் நல்லது தானே?! ' ன்னு கேக்குறார் !


####################################################################################


தலைவர் ரொம்ப அப்பாவியா இருக்கார்!
ஏன் அப்புடி சொல்ற ?!
'தேர்தல் ஆணையத்தோட கூட்டணி வெச்சா சுலபமா ஜெயிக்கலாமே' ன்னு சொல்றார் !


####################################################################################


இந்த தேர்தல்ல எந்த கட்சியுமே ஜெயிக்காதா ?! ஏன் ?!
ஆமா, பின்ன என்ன ?! எல்லாருமே 'மக்களுக்கு நல்லது பண்ற கட்சிக்கு ஒட்டு போடுங்க' ன்னு சொல்றாங்களே ?!


####################################################################################


தலைவர் ஏன் ரொம்ப கடுப்பா இருக்கார் ?!
எலெக்சன் டெபாசிட் கட்ட போகும்போது, அவுங்க வீட்டம்மா 'எதுக்குங்க இவ்ளோ பணத்த வேஸ்ட் பண்றீங்க' ன்னு கேட்டாங்களாம் !


####################################################################################

தலைவர் ரொம்ப முன்னேறிட்டார் !
எப்புடி ?!
எதிர்கட்சித் தலைவர், தேர்தல் அறிக்கையில "வீட்டுக்கு ஒரு கம்ப்யூட்டர்" னு சொன்னதும், இவர் "ஓட்டுக்கு ஒரு கம்ப்யூட்டர்" னு அறிக்கை விடறாரே !


####################################################################################



(படம் நானே வரைஞ்சதாக்கும் !)

18 வயது வந்த உடன் ஒரு ஓட்டு போட அனுமதிக்கும் தேர்தல் ஆணையமே ,நான் கேட்கிறேன் , 36 வயது வந்த உடன்  இரண்டு ஓட்டு போட அனுமதிக்காதது ஏன் ?


####################################################################################

Wednesday, January 26, 2011

2075 - ஒரு பிளாஷ் பேக் [சயின்ஸ் பிக்சன் தொடர் கதை(யாமாம் !) ] - 1


டிஸ்கி : இந்த 'தொடர்கதை' (!) யில் வரும் கதாபாத்திரங்கள், நிகழ்ச்சிகள் அனைத்தும் கற்பனையே.நான் படித்த கதைகளின், பார்த்த கேட்ட கதைகளின் பாதிப்புகள் இருக்கக் கூடும்.

============================================================================== 

"கிஷோர், சொன்ன மாதிரியே "SITISAN" டைம் மெசின் தானே வாங்கிட்டு வந்துருக்க ? அப்புறம் போன தடவ மாதிரி பாதி வழியிலயே நின்னுடுச்சுன்னா ரொம்ப கஷ்டமா போயிடும் !"

"ஆமாம்ப்பா, "SITISAN" மெசின் தான் வாங்கியிருக்கேன் ! வேலிடிட்டி 150 வருஷம். பழைய மாதிரியே , முன்னாடி 75 வருஷம் பின்னாடி 75 வருஷம். எந்த பிரச்சினையும் வராதுன்னு பெடரிக் மாமா சொன்னாரு. அவர் போன டைம் வாங்கினது 500  வருஷம் வேலிடிட்டி உள்ளது.ஆனா கொஞ்சம் காஸ்ட்லி. 2300 ரூபாயாம். நம்மது 870 ருபீஸ்தான்."

                                                  (படம் நானே வரைஞ்சதாக்கும் !)


"ஜெனி , எலாம் எடுத்து வெச்சிட்டியா ? எதுக்கும் ஒரு தடவ நல்லா செக் பண்ணிக்கோ. இந்தமுறை கொஞ்சம் லாங் ட்ரிப் தான் ப்ளான் பண்ணியிருக்கேன். முதல்ல 2075  வரை போறோம். முடிஞ்சா அங்க போயிட்டு வேலிடிட்டி EXTEND  பண்ணிக்கலாம். டிரைவர் இன்னும் கொஞ்ச நேரத்துல வந்துடுவார்."

கிரியும் , ஜெனியும் லவ் மேரேஜ். கிஷோர், மாகி என இரண்டு குழந்தைகள்.கிஷோர் - UKG , மாகி - PREKG.  ரொம்பா நாளா நச்சரிச்சு தான் இந்த TRIP க்கு கிரி சம்மதம் சொன்னான்.

"ஏன் கிரி, பாஸ் கிட்ட சொல்லிட்டுதானே எங்க கூட வர ?! அப்புறம் கிளம்புற நேரத்துல பாஸ் கூப்பிடுறார், கீஸ் கூப்பிடுறார்னு கத சொல்லிகிட்டிருக்காதே. "

"இல்ல ஜெனி, சொல்லிட்டுதான் வரேன். நீ ஒன்னும் கவலைப் படாதே !அவர் அடுத்த வருஷம்  போறதுக்கு பிளான் பண்ணியிருக்கார் ! அதான் ஒன்னும் சொல்லாம, SIGN பண்ணி கொடுத்திட்டார் !"

26  ஜனவரி , 2150 .
காலை 11 மணி 20 நிமிடம்.
இன்னும் 30 நிமிடம் 15 நொடி  120 MICRO நொடிகளில் மெசின் கிளம்பி விடும்.
அதற்கான ஆயத்த பணிகளில் இருந்தார் டிரைவர்.


"சார், ரூல்ஸ் எல்லாம் தெரியும்ல ?! பசங்களுக்கு நல்ல சொல்லிடுங்க. நான் CABIN குள்ள போயிட்டா , திரும்ப ரிடர்ன் வந்துதான் வெளிய வருவேன். மொதல்ல எங்க போறோம் ? 2075 க்கா, இல்ல 2225 க்கா ?! ஆனா, எப்புடி போனாலும் மொத்தம் 24 எடத்துல தான் எறங்க முடியும்."


"கிஷோர் , மாகி நல்ல கேட்டுக்குங்க..."

"அப்பா, ஒரே BORE  ! எத்தன தடவ இதையே திரும்ப திரும்ப சொல்லுவ ?!" மாகி கொஞ்சம் கோவமாகத்தான் கேட்டாள்.

"அது சரி மாகி, இதுதான் லாஸ்ட்டு . டிரைவர் UNCLE சொல்றாருல்ல ?!"

1 . வழில யாரு என்ன கொடுத்தாலும் வாங்கி சாப்பிட கூடாது.
2 . நைட் டைம்ல  மெசின் - ஐ விட்டு எறங்க கூடாது.
3 . பகல்ல இறங்கினாலும், 33 நிமிசத்துல திரும்ப உள்ள வந்துடனும்.
4 . ......

ரூல்செல்லாம் சொல்லி முடித்த பிறகு, சரியான நேரத்திற்கு, தன் இறக்கைகளை விரித்த படி கிளம்பியது  "SITISAN " TIME MACHINE  !

"டிரைவர் சார், முதல்ல 2075 க்கு போங்க" தான் மாட்டியிருக்கும் HEADPHONE இல் கிஷோர் சொல்ல, ஜெனி, கிஷோர், மாகி மூவரும் ஆர்வமானார்கள் !

- தொடரும்.

Saturday, January 8, 2011

அதிமுக + தேமுதிக ?! கச்சேரி ஆரம்பம் ?!

ஒச்சரிக்கை, ச்சீ... எச்சரிக்கை   : தீவிர அரசியல் பார்வையாளர்கள் , அப்படியே அடுத்த வலைப்பதிவிற்கு போவது நல்லது ! ஏதோ எனக்குத் தெரிந்த அரசியல் இதுதான்,இவ்வளவுதான்  ! இடுகையைப் படித்து விட்டு கடுப்பானால், அதற்கு நிர்வாகம் பொறுப்பல்ல !

வந்தாச்சு தேர்தல் ஆண்டு ! வாக்காளர்களுக்கு கொண்டாட்டம்தான் ! ஆடுகள் தான் பாவம் ! தேர்தலில் வெற்றிபெற வேண்டிய 'முஸ்தீபுகள்' குறித்து தலைவர்கள் திட்டம் தீட்ட ஆரம்பித்திருப்பார்கள் !

"எல்லாம் சரி , கேப்டன் எங்க போவார் ?! " - பெரும்பாலான வாக்காளர்களின் மனதில் இப்போது இருக்கும் கேள்வி இதுதான் ! கட்சி ஆரம்பித்து கிட்டத்தட்ட ஆறு ஆண்டுகள் ஆகப்போகிறது. நிறைய தேர்தல்களை சந்தித்து விட்டார் கேப்டன். வர இருக்கிற தேர்தல், யாருக்கு திருப்பு முனையாக இருக்கிறதோ இல்லையோ , அவரது அரசியல் வாழ்க்கையில் முக்கியமான தேர்தல் தான் ! எனவே தனது கட்சிக்கு இன்னும் கொஞ்சம் அதிகமான MLA க்கள் தேவை என்பதை உணர்ந்திருப்பார். மேடை தோறும் "திமுக மீண்டும் ஆட்சிக்கு வர விட மாட்டேன் " என்று கூறி வருகிறார் !

                                         நன்றி - புகைப்பட உதவி - www.indiasummary.com

அப்படியென்றால் ?! ஆம், அதேதான் ! அதிமுக + தேமுதிக !
நாளை சேலத்தில் தேமுதிக வின் 'மக்கள் உரிமை மீட்பு மாநாடு' நடைபெற இருக்கிறது.அநேகமாக இந்த மாநாட்டிலேயே தனது "மக்கள் கூட்டணி" யை உறுதி செய்து விடுவார் என்று நினைக்கிறேன் ! கொஞ்ச நாட்களாக நடக்கும் நிகழ்ச்சிகளும் அதைத்தான் உணர்த்துகின்றன !

'திடீரென்று' கேப்டன் டிவி பேட்டிகளில் ,
சுப்பிரமணியம் சுவாமி வருகிறார்,
சோ வருகிறார் ,
நாஞ்சில் சம்பத் வருகிறார்,
தா பாண்டியன் வருகிறார்,
ராம கிருஷ்ணன் வருகிறார் !

ஆம், கிட்டத் தட்ட 'ஜெ'வைத் தவிர்த்து அனைத்து "தோழமை"க் கட்சி பிரதிநிதிகளும் வருகின்றார்கள் !

                                       நன்றி - புகைப்பட உதவி - www.transcurrents.com

இன்று மாலை கூட, "மாலை மலரில் தேமுதிக சார்பில், அதிமுக தலைமையை விமர்சித்து வந்த விளம்பரத்திற்கும் , தேமுதிக விற்கும் எந்த சம்பந்தமும் இல்லை " என்று அவசர அறிக்கை வருகிறது , கேப்டனிடமிருந்து !

ஆக, கேப்டன் போயஸ் தோட்டம் பக்கம் வருகிறார் என்றுதான் தோன்றுகிறது! இந்த தேர்தல் சற்று 'இன்டரஸ்டிங்' காகவே இருக்கும் என்று நம்புகிறேன்.ஒருவேளை , நம்ம கணிப்பு சரியாக இருந்து, தேர்தலில் இந்த கூட்டணி வெற்றி பெற்றால், துணை முதல்வராக கேப்டன் வருவாரோ என்னவோ ?! பார்ப்போம் !

Saturday, January 1, 2011

ஸ்பெக்ட்ரம் ஸ்பெஷல் - 2

டிஸ்கி : இந்த இடுகை முழுவதும் நகைச்சுவைக்காகவே.
யார் மனதையும் புண்படுத்த அல்ல !


=================================================================================
"அந்த ஹோட்டல்ல, 'இன்றைய ஸ்பெசல்' னு போட்டு , 'காமன் வெல்த் தோசை , ஸ்பெக்ட்ரம் தோசை' ன்னு போட்டிருக்காங்களே ?! அப்படின்னா என்ன சார் ?!"

"காமன் வெல்த் தோசைன்னா 4 பேர் சாப்பிடலாம் , ஸ்பெக்ட்ரம் தோசைன்னா 40 பேர் சாப்பிடலாம் !"

"அங்க கேத்தன் தேசாய் தோசை கிடைக்குமா ?!"

"அது என்ன தோசை சார் ?!"

"நான் ஒருத்தன் மட்டும் தான் சாப்பிடப் போறேன் !"

                              நன்றி - புகைப்பட உதவி : http://www.commonwealthgame2010.com/
=================================================================================
"தலைவர் ஏன் ரொம்ப கோவமா இருக்கார் ?!"

"அவங்க வீட்டுக் காரம்மா வந்து, 'ஏங்க , 3G ஸ்பெக்ட்ரம் எப்போ  ஏலம் விடுவீங்க' ன்னு கேட்டுட்டுப் போறாங்க !"

=================================================================================
  "மன்னர் செம கடுப்புல இருக்கார் போல ?!"

"ஏன் , என்ன ஆச்சு ?!"


" 'தந்தையே, ஸ்பெக்ட்ரம் என்றால் என்ன ?' என்று இளவரசர் கேட்டதற்கு , 'ம்ம்ம்..வெங்காயம்' ன்னு பதில் சொல்றார்!" 

'அதுக்கு இளவரசர் என்ன சொன்னார் ?!'

" 'அது என்ன அவ்ளோ காஸ்ட்லியா தந்தையே ?!' ன்னு கேட்கிறார்  ''

                                       நன்றி - புகைப்பட உதவி : http://www.freshplaza.com

=================================================================================
 "தலைவர்கிட்ட , 'குழந்தைக்கு, வாயில வர்ற மாதிரி பெரு வைங்க ' ன்னு சொன்னது தப்பாப் போச்சு !"

"ஏன் ?! என்ன ஆச்சு ?!"

" 'ஸ்பெக்ட்ரம்' னு பேர் வெச்சுட்டார். கேட்டா , 'இப்போ அதுதான் எல்லோர் வாயிலையும் வர்ற வார்த்தை  ' னு  சொல்றார் !"

=================================================================================
"தலைவர் ரொம்ப அப்பாவியா இருக்கார் !" 

"ஏன் அப்படி சொல்றே ?!"

"எதிர்க் கட்சித் தலைவருக்கு டாக்டர் பட்டம் கொடுத்தது போல , தனக்கு 'இன்ஜினியர்' பட்டம் கொடுக்க வேண்டும் என்று அறிக்கை விடுறார் ! "

=================================================================================

மின்வெட்டு - தமிழர்களை விஞ்ஞானிகளாக்கும் தொலைநோக்கு முயற்சியா ?! (நகைச்சுவை)

கிட்டத்தட்ட ஒருவருடத்திற்கு மேலாக நான் அடிக்கடி பதிவெழுதுவது இல்லை. இருப்பினும் யாரவது நம் தளத்திற்கு வருகிறார்களா என்று STATS பார்ப்...